பெண்கள் மெட்டி அணிவது ஏன்?





பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். 

காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?



யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்? 
  • 18 - 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும், பெண்களும் ரத்த தானம் செய்யலாம்.
  • ரத்த தானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்க வேண்டும்.
  • ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும்.
  • ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.

யாரெல்லாம் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்?
  1. கர்ப்பிணிகளும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்களும் தவிர்க்க வேண்டும்.
  2. பெரிய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 6 மாதங்களுக்குள்ளும், சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 3 மாதங்களுக்குள்ளும் ரத்த தானம் செய்வதை தவிர்க்கவும்.
  3. மலேரியா நோய் சிகிச்சை பெற்ற மூன்று மாதங்களுக்கு தவிர்க்கவும்.
  4. மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்ற 6 மாதங்கள் வரை தவிர்ப்பது நல்லது.
  5. பால்வினை/ஹெச்.ஐ.வி. பாதிப்புள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
  6. மாதவிடாய் நேரங்களில் பெண்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம்.

ஆறாவது அறிவின் கதவைத் திறக்கும் "தியானம்"


தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிறது.தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும்.

இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது.நம்முடைய ஆறாவது அறிவின் கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது.தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும்.

தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும்.ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.

சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.

இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும்.

கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.

நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு.மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.

நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்ல வேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.

மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது. மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.

இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள்.கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.

இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.

இந்நிலையில்ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.இதுதான் தியான நிலை.

இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும்.

கைப்பேசிகளில் பேஸ்புக்கை மிக வேகமாக இயக்க இலவச அப்ளிகேசன்.






இன்றைய உலகில் அனைவரின் வாழ்விலும் மிக முக்கிய இடம் பிடித்துள்ளது பேஸ்புக் சமூக வலைத்தளம்.இதனை பெரும்பாலானோர் தங்களத கைப்பேசி வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.அவ்வாறு உபயோகிக்கும் போது ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், ஒவ்வொரு வேகம் இருக்கும்.

இந்த குறையினை நீக்கி பேஸ்புக் தளத்தை வேகமாக அணுகி செயற்படுத்த ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் FAST FACE BOOK APP உதவுகிறது. இதன் பீட்டா பதிப்பினை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பெற முடியும்.

FAST FACE BOOK APP சிறப்பம்சங்கள்:
  • 3 மடங்கு வேகத்தன்மை வாய்ந்தது.
  • குறைந்தளவு பற்றரி மற்றும் நினைவாக பயன்பாடு.
புகைப்பட தேடல், பதிவேற்றம், நண்பர்கள் தேடல், செய்திகள் அனுப்புதல், STATUS UPDATE, NOTIFICATIONS என்பவற்றை இலகுவாகவும் விரைவாகவும் அணுகும் வசதி.

அதிக பீர் டப்பாக்ககளை கையால் உடைத்து சாதனை


அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்....



ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.
0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.
எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.
விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:
TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை
■ நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!
● பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639
● பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு: Toll Free No - 180011400 / 94454 64748 / 72999 98002 / 72000
18001 / 044- 28592828
● மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க: 044 – 26530504 / 26530599
● வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்: 044- 26184392 / 9171313424
● ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
● ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்: 044-24749002 / 26744445
● சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற பேரில் கொடுமைகள் புரிந்தால்: 95000 99100 ( SMS )
● மனித உரிமைகள் ஆணையம்: 044-22410377
● மாநகரபேருந்தில அத்துமீறல்: 09383337639
● போலீஸ் SMS : 9500099100
● போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS: 9840983832
● போக்குவரத்து விதிமீறல் SMS : 98400 00103
● வங்கித் திருட்டு உதவிக்கு: 98408 14100
● வன்கொடுமை, பாலியல் ரீதியாக : 044-28551155

மயக்க மருந்து கொடுக்கும் போது நம் உடலில் நடப்பது என்ன?






மயக்க மருந்து (Anaesthesia) என்றால் என்ன?
அறுவை மருத்துவம் நடைபெறம் போது நோயாளிக்கு எந்தவித வலி உணர்வு இல்லாதிருக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் நுட்பத்துக்கு, மருந்துக்கு மயக்க மருந்து என்பார்கள்.

மயக்க மருந்தின் வகைகள்
லோகல் அனெஸ்தீஸியா (LA)
தோலின் மீதும் சவ்வின் மீதும் பூசப்படும் மருந்து அல்லது தோலின் கீழே செலுத்தப்படும் ஊசி மருந்து லோகல் அனெஸ்தீஸியா எனப்படும். இது பிற மயக்க மருந்துகளோடுஒப்பிடும் போது பாதுக்காப்பானதும் எணிமையானதும் மயக்க மருந்து வல்லுநர் உதவியற்ற நுட்பமாகும்.

ரீஜினல் அனெஸ்தீஸியா (RA)
உடலின் சில பாகங்களுக்கு நரம்புகளின் வழி வலி குறிப்புகள் பரவா வண்ணம் ஒன்று அல்லது பல ஊசி மருந்துகளை ரீஜினல் அனெஸ்தீஸியா என்பார்கள். இதன் விளைவாக உடலில் குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப் போகும். நோயாளி உணர்வுடன் இருக்கம்போதே அவருக்கு அறுவை மருத்துவம் நடத்தலாம். அறுவை மருந்துவம் நடைபெறும் உடற்பகுதி பெரும்பாலும் மறைக்கப் பட்டிருக்கும். உணர்வுகளை அடக்கும் மருந்தும் தரப்படலாம். இதனால் நோயாளி அறுவை மருத்துவம் நடைபெறம் போது உறங்கி விடுவார். கை, கால், பிட்டம் முதலான இடங்களில் அறுவை மருத்துவம் நடைபெறம் போது ஸிகி தரலாம்.

பொது மயக்க மருந்து (General Anaesthesia)(GA)
தீவிர மயக்க மருந்தைப் பயன்படுத்தி நோயாளியை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்துவதற்கு நிகி பயன்படும். வழக்கமான உறக்கத்தைப் போலன்றி இந்த ஆழ் உறக்கத்தின் போது நோயாளி பெயரிட்டு அழைத்தாலும், தொந்தரவு செய்தாலும் கூட விழிக்க மாட்டான். எனவே பொது மயக்க மருந்தைக் கொடுக்கும் போது, நோயாளி தன் சுற்றச் சூழ் நிலையையும், மிக முக்கியமாக அறுவை மருத்துவம் நடைபெறுவதையும் அதன் வலியையும் அறவே உணர மாட்டார். அறுவை மருத்துவம் நடந்து முடியுமட்டும் மயக்க மருந்து வல்லுநர் உடன் இருந்த அறுவைக்குப் பின் ஏற்படும் வலியைப் போக்கும் நிவாரணத்தை அளிப்பார்.

மயக்க மருந்து எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?
மயக்க மருந்து பாதுகாப்பானது. மயக்க மருந்து தொடர்பான மரணங்களும், பல்வேறு சிக்கல்களும் நாளடைவில் எண்ணிக்கையில் பெருமளவில் குறைந்து வருகின்றன. நோயாளியின் நலனைப் பேண மயக்க மருந்து வல்லுநர் உடனிருப்பது ஒரு மிக முக்கிய ஆக்கக் கூறாகும். உருவாக்கப் பட்டுள்ள புது கருவிகளும், நுட்பங்களும், மயக்க மருந்துகளும், மயக்க மருந்தின் பாதுகாப்பை அதிகரிக்க வழி வகுக்கின்றன.

மயக்க மருந்தின் மயக்கத்திலிருந்து விழிக்க முடியுமா?
மயக்க மருந்து அதிகம் கொடுத்தால் அதிலிருந்து விழிக்க முடியாமற் போவதவற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில் புது மயக்க மருந்துகள் விரைவில் செயலிழப்பதாலும் தரப்படும் மயக்க மருந்தின் அளவை சீர்படுத்தும் நுண்ணிய கருவிகளைக் கொண்டு மருந்து அளிக்கப் படுவதால் அதிக மயக்க மருந்து தரப்படும் வாய்ப்புகள் மிகக் குறைவானதாலும் நீங்கள் மயக்கத்திலிருந்து விழிக்க முடியாமற் போகும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

மயக்க மருந்தின் மயக்கத்தினிடையில் விழிக்கும் வாய்ப்புண்டா?
அறுவை மருத்துவம் நடந்து முடியுமட்டும் மயக்கத்தில் இருக்குமாறு மருந்து அளிக்கப் படுவதால் இடையே விழிப்பது பொதுவாக நடைபெறாது. எனினும் இதய வைபாஸ் அறுவை மருத்துவம் வயிற்றைக் கீறிய பிரசவம் போன்ற சிலவகை அறுவை மருத்துவங்களின் போது நோயாளி இடையே விழிப்புறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மயக்கத்திலிருந்து விழித்ததும் அதிக வலியை உணர்வேனா?
அது நடைபெறும் அறுவை மருத்துவத்தைப் பொறுத்தது. பொதுவாக அறுவையின் போது பெரும்பாலான நோயாளிகளுக்கு ஏதோ ஒருவித வலி நிவாரண மருந்து தரப்படும் என்றாலும் வெவ்வேறு நோயாளிகளுக்கு வெவ்வேறு நிலை வலி வாய்ப்புகள் இருக்குமாதலால் மயக்க உணர்விலிருந்து மீண்டவுடன் சற்று வலி இருக்கத்தான் செய்யும். அந்நிலையில் இன்னும் சற்றுக் கூடுதலான வலி போக்கி மருந்துகளைத் தந்த நோயாளியை மேலும் அமைதியுறுத்தலாம்.

மயக்க மருந்தின் பயனாக பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா?
பொதுவாக ஆனால் தற்காலிகமாக ஏற்படும் பக்க விளைவுகளாவன:-
• குமட்டலும் வாந்தியும்,
• தூங்கி வழிதல்,
• சிறுநீர்க் கழிப்பில் தற்காலிக இயலாமை
• தொண்டைக் கட்டுதல்
• தலைவலி

தசை வலி, பற்களுக்கும், கட்டப் பட்ட செயற்கை பற்களுக்கும், உதடுகளுக்கும், நாக்குக்கம் சேதம் எற்படலாம். தற்காலிக சுவாசக்கடினம், தற்காலிகமாக பேசுவதில் கடினம், தற்காலிக நரம்பு தளர்ச்சி முதலான சிறு தொல்லைகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.மிக அரிதாக என்றாலும் சில தீவிர சிக்கல்களும் ஏற்படலாம். உதாரணமாக இதய தடுப்பு, பக்கவாதம், தீவிர அலர்ஜியால் எதிர் விளைவுகள், மூளை மற்றும் நுரையீரல்கள் பாதிப்பு, சிறுநீரகம், ஈரல் இயங்காமை, நிரந்தர நரம்பு தளர்ச்சி, கண் காயம், குரல்வளை பாதிப்பு, சீதசக்காய்ச்சல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

மயக்க மருந்து பயன்படுத்தியதால் நினைவாற்றலை இழந்து விடுவேனா?
நீண்ட கால நினைவிழப்பு ஏதும் இருக்கவே இருக்காது. என்றாலும் ஆறுவை மருத்துவம் நடந்த போது நடை பெற்ற செயல்களை நினைவு கூற முடியாது போன்ற சில தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்படலாம். ஏனெனில் வலியைத் தணிப்பதற்கும் கவலையைக் குறைப்பதற்கும் உணர்வுகளை அடக்குவதற்கும் தரப்பட்ட சில மருந்துகள் தற்காலிகமாக சற்று நேர நினைவிழப்பை ஏற்படுத்தும் தன்மையுடையன.

பயன்படுத்த வேண்டிய மருந்துகள் எவை?
நீங்கள் மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய தேவையை உறுதி செய்ய உங்கள் மருத்துவரையோ, மயக்க மருந்து வல்லுநரையோ கலந்தாலோசியுங்கள்.

அறுவை மருத்துவதத்திற்கு முன்னர் ஏன் உண்ணாமலிருக்க வேண்டும்?
GS அல்லது RA வகை அறுவை மருத்துவம் செய்யும் போது நோயாளி உண்ணாமலிருப்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் நோயாளி நிகி-வில் இருக்கும் போது அவரது உடல் பாதுகாப்பு தன்னியல் நிகழ்வுகளை இழந்து விடும். அவரது வயிற்றில் ஏதேனும் உணவுப் பொருட்கள் இருந்தால் அவை பின்னோக்கி நகர்ந்து வாய்க்குள் வந்து மூச்சடைப்பை ஏற்படுத்தும். அவை நுரையீரல்களுக்குள் சென்று தீவிர மார்பு தொற்றுநோயை பரப்பி உயிருக்கே அபாய மேற்படுத்தக் கூடும்.

இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்




ஐ.டி.எஸ். எனப்படும் இந்த டிராபிக் கன்ட்ரோலில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட போர்டுகள் போக்குவரத்து நிலைமையை காட்டிக் கொண்டேயிருக்கும்.

அதிலுள்ள சென்சார்கள் அடுத்தடுத்த சாலைகளில் உள்ள போக்குவரத்து நிலவரங்களை கண்டறிந்து எல்.இ.டி. விளக்குகளில் பிளாஷ் செய்கிறது. அதற்கான குறியீடுகளையும் படமிட்டு காட்டுகிறது. இதைபார்த்து வாகன ஓட்டிகள் அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவெடுத்துக் கொள்ளலாம்.

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஜப்பானுக்கு சென்றிருந்தார். அங்குள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு முறைகளை பார்த்து வியந்த அவர் ஜப்பானை போன்றே குஜராத்திலும் இப்படியொரு போக்குவரத்து முறையை அமைக்க சர்வதேச ஒத்துழைப்பு முகமையான ‘ஜைக்கா’ விடம் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, அண்மையில் பிரதமரான பிறகும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில், பிரதமரின் கோரிக்கையை ஏற்று ஜப்பானை சேர்ந்த ஜீரோ சம் கம்பெனி அகமதாபாத் முனிசிபல் கழகத்துடன் இணைந்து இன்று 132 அடி ரிங் ரோட்டில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதற்கட்ட சோதனை நடத்தி பார்த்தது. இதற்கு ‘ஜைக்கா’ நிதியுதவி செய்தது.

இந்த சோதனையில், சென்சார் வசதி கொண்ட 14 கேமிராக்களும், வி.எம்.எஸ் எனப்படும் 4 பெரிய எல்.இ.டி. விளக்குகள் கொண்ட டிஸ்பிளே போர்டுகளும் குறிப்பிட்ட இடைவேளைகளில் பொருத்தப்பட்டது. வாகன போக்குவரத்தை அந்த சென்சார்கள் துல்லியமாக உணர்ந்து குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பிளாஷ் செய்தது. 

இந்த சோதனை 2015 மார்ச் இறுதி வரை செயல்படுத்தப்படும். அதன்பிறகு, ஏ.எம்.சி. முறையில் இந்த ஐ.டி.எஸ் டிராபிக் சிஸ்டம் இந்தியாவில் பல நகரங்களில் அமைக்கப்படுகிறது.

CV vs RESUME vs BIO DATA மூன்றுக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்ளுங்கள்!!

பயோ-டேட்டா (BIO-DATA) 
* ஒரு பக்க அளவில் நம் பண்புகள், பொழுதுபோக்குகள், எந்தத் துறையில் எந்தப் பிரிவில் ஆர்வம், கல்வி தகுதி அடங்கிய அறிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு ஒரு பக்கத்திற்கு மிகாமல் அளிப்பது தான் பயோ-டேட்டா! 
* இது ஒருவரை பற்றிய அடிப்படை தகவல்களை அளிக்க உதவும் ஒரு சிறு அறிக்கையாக இருக்கும். இதனை பெரும்பாலும் ஒரு சந்திப்பின் போது அறிமுகத்திற்காக பயன்படுத்துவார்கள். 
* முதல் முறையாக இன்டர்வியூவிற்கு செல்லும் செல்பவர்கள் அதனை எடுத்து செல்வது தான் சிறந்தது. கல்லூரி மாணவர்கள் சிலர் ரெஸ்யூம் என்று இதனை குறிப்பிடுகிறார்கள் ஆனால் இது வெறும் பயோ-டேட்டா தான். 

ரெஸ்யூம் (RESUME) 
* ரெஸ்யூம் என்பது ஒருவரது திறன், கல்வி தகுதி, அனுபவம் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையாகும். இது ஒன்று முதல் இரண்டு பக்க அளவில் இருக்கலாம். 
* இதனை பெரும்பாலும் புதிய வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது துறை மாறி விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்தலாம். 
* இதனை பயன்படுத்துவதன் மூலம் ஒருவரது தனித்திறன், அவரது கல்வித்தகுதி அடிப்படையில் முன்னுரிமை கிடைக்க இது வழிவகுக்கும். 

CV (CURRICULUM VITAE), 
* இது சற்று பெரியது, பயோ-டேட்டா அல்லது ரெஸ்யூம்வை போல அல்லாமல் சற்று விரிவாக இருக்கும். இதில் ஒருவரை பற்றிய விரிவான சிறு விளக்கம் மற்றும் அவரது திறன், அனுபவம் பற்றிய சிறு விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். 
* இதனை வேலைக்கு செல்பவர் அல்லது பெரிய பதவியில் இருப்பவர் இன்னொரு நிறுவனத்தில் பெரிய பதவிக்கு விண்ணப்பிக்கும் போதும் பயன்படுத்தப்படும். 

இவை தான் இந்த மூன்று தகவல் அறிக்கைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்! இதனை தேர்வு செய்யும் போது சரியாக தேர்வு செய்தாலே உங்களை மதிப்பிடுபவருக்கு உங்கள் மீது ஒரு நல்ல அணுகுமுறையை உண்டாக்கும். அதனால் இதனை தயார் செய்யும் போது கவனமாகவும், தெளிவாகவும், புரியும்படியும் உங்கள் தகவல்களை அளிக்க பழகுங்கள்.