பெண்கள் மெட்டி அணிவது ஏன்?





பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். 

காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?



யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்? 
  • 18 - 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும், பெண்களும் ரத்த தானம் செய்யலாம்.
  • ரத்த தானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்க வேண்டும்.
  • ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும்.
  • ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.

யாரெல்லாம் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்?
  1. கர்ப்பிணிகளும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்களும் தவிர்க்க வேண்டும்.
  2. பெரிய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 6 மாதங்களுக்குள்ளும், சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 3 மாதங்களுக்குள்ளும் ரத்த தானம் செய்வதை தவிர்க்கவும்.
  3. மலேரியா நோய் சிகிச்சை பெற்ற மூன்று மாதங்களுக்கு தவிர்க்கவும்.
  4. மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்ற 6 மாதங்கள் வரை தவிர்ப்பது நல்லது.
  5. பால்வினை/ஹெச்.ஐ.வி. பாதிப்புள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
  6. மாதவிடாய் நேரங்களில் பெண்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம்.

ஆறாவது அறிவின் கதவைத் திறக்கும் "தியானம்"


தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிறது.தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும்.

இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது.நம்முடைய ஆறாவது அறிவின் கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது.தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும்.

தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும்.ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.

சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.

இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும்.

கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.

நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு.மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.

நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்ல வேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.

மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது. மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.

இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள்.கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.

இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.

இந்நிலையில்ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.இதுதான் தியான நிலை.

இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும்.

கைப்பேசிகளில் பேஸ்புக்கை மிக வேகமாக இயக்க இலவச அப்ளிகேசன்.






இன்றைய உலகில் அனைவரின் வாழ்விலும் மிக முக்கிய இடம் பிடித்துள்ளது பேஸ்புக் சமூக வலைத்தளம்.இதனை பெரும்பாலானோர் தங்களத கைப்பேசி வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.அவ்வாறு உபயோகிக்கும் போது ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், ஒவ்வொரு வேகம் இருக்கும்.

இந்த குறையினை நீக்கி பேஸ்புக் தளத்தை வேகமாக அணுகி செயற்படுத்த ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் FAST FACE BOOK APP உதவுகிறது. இதன் பீட்டா பதிப்பினை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பெற முடியும்.

FAST FACE BOOK APP சிறப்பம்சங்கள்:
  • 3 மடங்கு வேகத்தன்மை வாய்ந்தது.
  • குறைந்தளவு பற்றரி மற்றும் நினைவாக பயன்பாடு.
புகைப்பட தேடல், பதிவேற்றம், நண்பர்கள் தேடல், செய்திகள் அனுப்புதல், STATUS UPDATE, NOTIFICATIONS என்பவற்றை இலகுவாகவும் விரைவாகவும் அணுகும் வசதி.

அதிக பீர் டப்பாக்ககளை கையால் உடைத்து சாதனை


அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்....



ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.
0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.
எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.
விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:
TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை
■ நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!
● பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639
● பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு: Toll Free No - 180011400 / 94454 64748 / 72999 98002 / 72000
18001 / 044- 28592828
● மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க: 044 – 26530504 / 26530599
● வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்: 044- 26184392 / 9171313424
● ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
● ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்: 044-24749002 / 26744445
● சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற பேரில் கொடுமைகள் புரிந்தால்: 95000 99100 ( SMS )
● மனித உரிமைகள் ஆணையம்: 044-22410377
● மாநகரபேருந்தில அத்துமீறல்: 09383337639
● போலீஸ் SMS : 9500099100
● போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS: 9840983832
● போக்குவரத்து விதிமீறல் SMS : 98400 00103
● வங்கித் திருட்டு உதவிக்கு: 98408 14100
● வன்கொடுமை, பாலியல் ரீதியாக : 044-28551155

மயக்க மருந்து கொடுக்கும் போது நம் உடலில் நடப்பது என்ன?






மயக்க மருந்து (Anaesthesia) என்றால் என்ன?
அறுவை மருத்துவம் நடைபெறம் போது நோயாளிக்கு எந்தவித வலி உணர்வு இல்லாதிருக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் நுட்பத்துக்கு, மருந்துக்கு மயக்க மருந்து என்பார்கள்.

மயக்க மருந்தின் வகைகள்
லோகல் அனெஸ்தீஸியா (LA)
தோலின் மீதும் சவ்வின் மீதும் பூசப்படும் மருந்து அல்லது தோலின் கீழே செலுத்தப்படும் ஊசி மருந்து லோகல் அனெஸ்தீஸியா எனப்படும். இது பிற மயக்க மருந்துகளோடுஒப்பிடும் போது பாதுக்காப்பானதும் எணிமையானதும் மயக்க மருந்து வல்லுநர் உதவியற்ற நுட்பமாகும்.

ரீஜினல் அனெஸ்தீஸியா (RA)
உடலின் சில பாகங்களுக்கு நரம்புகளின் வழி வலி குறிப்புகள் பரவா வண்ணம் ஒன்று அல்லது பல ஊசி மருந்துகளை ரீஜினல் அனெஸ்தீஸியா என்பார்கள். இதன் விளைவாக உடலில் குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப் போகும். நோயாளி உணர்வுடன் இருக்கம்போதே அவருக்கு அறுவை மருத்துவம் நடத்தலாம். அறுவை மருந்துவம் நடைபெறும் உடற்பகுதி பெரும்பாலும் மறைக்கப் பட்டிருக்கும். உணர்வுகளை அடக்கும் மருந்தும் தரப்படலாம். இதனால் நோயாளி அறுவை மருத்துவம் நடைபெறம் போது உறங்கி விடுவார். கை, கால், பிட்டம் முதலான இடங்களில் அறுவை மருத்துவம் நடைபெறம் போது ஸிகி தரலாம்.

பொது மயக்க மருந்து (General Anaesthesia)(GA)
தீவிர மயக்க மருந்தைப் பயன்படுத்தி நோயாளியை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்துவதற்கு நிகி பயன்படும். வழக்கமான உறக்கத்தைப் போலன்றி இந்த ஆழ் உறக்கத்தின் போது நோயாளி பெயரிட்டு அழைத்தாலும், தொந்தரவு செய்தாலும் கூட விழிக்க மாட்டான். எனவே பொது மயக்க மருந்தைக் கொடுக்கும் போது, நோயாளி தன் சுற்றச் சூழ் நிலையையும், மிக முக்கியமாக அறுவை மருத்துவம் நடைபெறுவதையும் அதன் வலியையும் அறவே உணர மாட்டார். அறுவை மருத்துவம் நடந்து முடியுமட்டும் மயக்க மருந்து வல்லுநர் உடன் இருந்த அறுவைக்குப் பின் ஏற்படும் வலியைப் போக்கும் நிவாரணத்தை அளிப்பார்.

மயக்க மருந்து எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?
மயக்க மருந்து பாதுகாப்பானது. மயக்க மருந்து தொடர்பான மரணங்களும், பல்வேறு சிக்கல்களும் நாளடைவில் எண்ணிக்கையில் பெருமளவில் குறைந்து வருகின்றன. நோயாளியின் நலனைப் பேண மயக்க மருந்து வல்லுநர் உடனிருப்பது ஒரு மிக முக்கிய ஆக்கக் கூறாகும். உருவாக்கப் பட்டுள்ள புது கருவிகளும், நுட்பங்களும், மயக்க மருந்துகளும், மயக்க மருந்தின் பாதுகாப்பை அதிகரிக்க வழி வகுக்கின்றன.

மயக்க மருந்தின் மயக்கத்திலிருந்து விழிக்க முடியுமா?
மயக்க மருந்து அதிகம் கொடுத்தால் அதிலிருந்து விழிக்க முடியாமற் போவதவற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில் புது மயக்க மருந்துகள் விரைவில் செயலிழப்பதாலும் தரப்படும் மயக்க மருந்தின் அளவை சீர்படுத்தும் நுண்ணிய கருவிகளைக் கொண்டு மருந்து அளிக்கப் படுவதால் அதிக மயக்க மருந்து தரப்படும் வாய்ப்புகள் மிகக் குறைவானதாலும் நீங்கள் மயக்கத்திலிருந்து விழிக்க முடியாமற் போகும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

மயக்க மருந்தின் மயக்கத்தினிடையில் விழிக்கும் வாய்ப்புண்டா?
அறுவை மருத்துவம் நடந்து முடியுமட்டும் மயக்கத்தில் இருக்குமாறு மருந்து அளிக்கப் படுவதால் இடையே விழிப்பது பொதுவாக நடைபெறாது. எனினும் இதய வைபாஸ் அறுவை மருத்துவம் வயிற்றைக் கீறிய பிரசவம் போன்ற சிலவகை அறுவை மருத்துவங்களின் போது நோயாளி இடையே விழிப்புறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மயக்கத்திலிருந்து விழித்ததும் அதிக வலியை உணர்வேனா?
அது நடைபெறும் அறுவை மருத்துவத்தைப் பொறுத்தது. பொதுவாக அறுவையின் போது பெரும்பாலான நோயாளிகளுக்கு ஏதோ ஒருவித வலி நிவாரண மருந்து தரப்படும் என்றாலும் வெவ்வேறு நோயாளிகளுக்கு வெவ்வேறு நிலை வலி வாய்ப்புகள் இருக்குமாதலால் மயக்க உணர்விலிருந்து மீண்டவுடன் சற்று வலி இருக்கத்தான் செய்யும். அந்நிலையில் இன்னும் சற்றுக் கூடுதலான வலி போக்கி மருந்துகளைத் தந்த நோயாளியை மேலும் அமைதியுறுத்தலாம்.

மயக்க மருந்தின் பயனாக பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா?
பொதுவாக ஆனால் தற்காலிகமாக ஏற்படும் பக்க விளைவுகளாவன:-
• குமட்டலும் வாந்தியும்,
• தூங்கி வழிதல்,
• சிறுநீர்க் கழிப்பில் தற்காலிக இயலாமை
• தொண்டைக் கட்டுதல்
• தலைவலி

தசை வலி, பற்களுக்கும், கட்டப் பட்ட செயற்கை பற்களுக்கும், உதடுகளுக்கும், நாக்குக்கம் சேதம் எற்படலாம். தற்காலிக சுவாசக்கடினம், தற்காலிகமாக பேசுவதில் கடினம், தற்காலிக நரம்பு தளர்ச்சி முதலான சிறு தொல்லைகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.மிக அரிதாக என்றாலும் சில தீவிர சிக்கல்களும் ஏற்படலாம். உதாரணமாக இதய தடுப்பு, பக்கவாதம், தீவிர அலர்ஜியால் எதிர் விளைவுகள், மூளை மற்றும் நுரையீரல்கள் பாதிப்பு, சிறுநீரகம், ஈரல் இயங்காமை, நிரந்தர நரம்பு தளர்ச்சி, கண் காயம், குரல்வளை பாதிப்பு, சீதசக்காய்ச்சல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

மயக்க மருந்து பயன்படுத்தியதால் நினைவாற்றலை இழந்து விடுவேனா?
நீண்ட கால நினைவிழப்பு ஏதும் இருக்கவே இருக்காது. என்றாலும் ஆறுவை மருத்துவம் நடந்த போது நடை பெற்ற செயல்களை நினைவு கூற முடியாது போன்ற சில தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்படலாம். ஏனெனில் வலியைத் தணிப்பதற்கும் கவலையைக் குறைப்பதற்கும் உணர்வுகளை அடக்குவதற்கும் தரப்பட்ட சில மருந்துகள் தற்காலிகமாக சற்று நேர நினைவிழப்பை ஏற்படுத்தும் தன்மையுடையன.

பயன்படுத்த வேண்டிய மருந்துகள் எவை?
நீங்கள் மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய தேவையை உறுதி செய்ய உங்கள் மருத்துவரையோ, மயக்க மருந்து வல்லுநரையோ கலந்தாலோசியுங்கள்.

அறுவை மருத்துவதத்திற்கு முன்னர் ஏன் உண்ணாமலிருக்க வேண்டும்?
GS அல்லது RA வகை அறுவை மருத்துவம் செய்யும் போது நோயாளி உண்ணாமலிருப்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் நோயாளி நிகி-வில் இருக்கும் போது அவரது உடல் பாதுகாப்பு தன்னியல் நிகழ்வுகளை இழந்து விடும். அவரது வயிற்றில் ஏதேனும் உணவுப் பொருட்கள் இருந்தால் அவை பின்னோக்கி நகர்ந்து வாய்க்குள் வந்து மூச்சடைப்பை ஏற்படுத்தும். அவை நுரையீரல்களுக்குள் சென்று தீவிர மார்பு தொற்றுநோயை பரப்பி உயிருக்கே அபாய மேற்படுத்தக் கூடும்.

இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்




ஐ.டி.எஸ். எனப்படும் இந்த டிராபிக் கன்ட்ரோலில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட போர்டுகள் போக்குவரத்து நிலைமையை காட்டிக் கொண்டேயிருக்கும்.

அதிலுள்ள சென்சார்கள் அடுத்தடுத்த சாலைகளில் உள்ள போக்குவரத்து நிலவரங்களை கண்டறிந்து எல்.இ.டி. விளக்குகளில் பிளாஷ் செய்கிறது. அதற்கான குறியீடுகளையும் படமிட்டு காட்டுகிறது. இதைபார்த்து வாகன ஓட்டிகள் அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவெடுத்துக் கொள்ளலாம்.

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஜப்பானுக்கு சென்றிருந்தார். அங்குள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு முறைகளை பார்த்து வியந்த அவர் ஜப்பானை போன்றே குஜராத்திலும் இப்படியொரு போக்குவரத்து முறையை அமைக்க சர்வதேச ஒத்துழைப்பு முகமையான ‘ஜைக்கா’ விடம் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, அண்மையில் பிரதமரான பிறகும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில், பிரதமரின் கோரிக்கையை ஏற்று ஜப்பானை சேர்ந்த ஜீரோ சம் கம்பெனி அகமதாபாத் முனிசிபல் கழகத்துடன் இணைந்து இன்று 132 அடி ரிங் ரோட்டில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதற்கட்ட சோதனை நடத்தி பார்த்தது. இதற்கு ‘ஜைக்கா’ நிதியுதவி செய்தது.

இந்த சோதனையில், சென்சார் வசதி கொண்ட 14 கேமிராக்களும், வி.எம்.எஸ் எனப்படும் 4 பெரிய எல்.இ.டி. விளக்குகள் கொண்ட டிஸ்பிளே போர்டுகளும் குறிப்பிட்ட இடைவேளைகளில் பொருத்தப்பட்டது. வாகன போக்குவரத்தை அந்த சென்சார்கள் துல்லியமாக உணர்ந்து குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பிளாஷ் செய்தது. 

இந்த சோதனை 2015 மார்ச் இறுதி வரை செயல்படுத்தப்படும். அதன்பிறகு, ஏ.எம்.சி. முறையில் இந்த ஐ.டி.எஸ் டிராபிக் சிஸ்டம் இந்தியாவில் பல நகரங்களில் அமைக்கப்படுகிறது.

CV vs RESUME vs BIO DATA மூன்றுக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்ளுங்கள்!!

பயோ-டேட்டா (BIO-DATA) 
* ஒரு பக்க அளவில் நம் பண்புகள், பொழுதுபோக்குகள், எந்தத் துறையில் எந்தப் பிரிவில் ஆர்வம், கல்வி தகுதி அடங்கிய அறிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு ஒரு பக்கத்திற்கு மிகாமல் அளிப்பது தான் பயோ-டேட்டா! 
* இது ஒருவரை பற்றிய அடிப்படை தகவல்களை அளிக்க உதவும் ஒரு சிறு அறிக்கையாக இருக்கும். இதனை பெரும்பாலும் ஒரு சந்திப்பின் போது அறிமுகத்திற்காக பயன்படுத்துவார்கள். 
* முதல் முறையாக இன்டர்வியூவிற்கு செல்லும் செல்பவர்கள் அதனை எடுத்து செல்வது தான் சிறந்தது. கல்லூரி மாணவர்கள் சிலர் ரெஸ்யூம் என்று இதனை குறிப்பிடுகிறார்கள் ஆனால் இது வெறும் பயோ-டேட்டா தான். 

ரெஸ்யூம் (RESUME) 
* ரெஸ்யூம் என்பது ஒருவரது திறன், கல்வி தகுதி, அனுபவம் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையாகும். இது ஒன்று முதல் இரண்டு பக்க அளவில் இருக்கலாம். 
* இதனை பெரும்பாலும் புதிய வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது துறை மாறி விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்தலாம். 
* இதனை பயன்படுத்துவதன் மூலம் ஒருவரது தனித்திறன், அவரது கல்வித்தகுதி அடிப்படையில் முன்னுரிமை கிடைக்க இது வழிவகுக்கும். 

CV (CURRICULUM VITAE), 
* இது சற்று பெரியது, பயோ-டேட்டா அல்லது ரெஸ்யூம்வை போல அல்லாமல் சற்று விரிவாக இருக்கும். இதில் ஒருவரை பற்றிய விரிவான சிறு விளக்கம் மற்றும் அவரது திறன், அனுபவம் பற்றிய சிறு விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். 
* இதனை வேலைக்கு செல்பவர் அல்லது பெரிய பதவியில் இருப்பவர் இன்னொரு நிறுவனத்தில் பெரிய பதவிக்கு விண்ணப்பிக்கும் போதும் பயன்படுத்தப்படும். 

இவை தான் இந்த மூன்று தகவல் அறிக்கைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்! இதனை தேர்வு செய்யும் போது சரியாக தேர்வு செய்தாலே உங்களை மதிப்பிடுபவருக்கு உங்கள் மீது ஒரு நல்ல அணுகுமுறையை உண்டாக்கும். அதனால் இதனை தயார் செய்யும் போது கவனமாகவும், தெளிவாகவும், புரியும்படியும் உங்கள் தகவல்களை அளிக்க பழகுங்கள்.

ஆந்திரா கிராமத்தில் பெய்த மீன் மழை போட்டி போட்டு அள்ளி சென்ற மக்கள்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில்  கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நந்தி காமா மண்டலத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.

கொள்ளமுடி, பல்லகிரி ஆகிய கிராமங்களில் விவசா யிகள் நேற்று காலை வழக்கம் போல் தங்கள் வயல்களுக்கு சென்றனர். அப்போது இரவு பெய்த மழையில் வயல் களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் ஏராளமான மீன்கள் உயிருடன் நீந்தியது. நூற்றுக்கணக்கான மீன்கள் தரையிலும் சிதறி கிடந்தது. சுமார் 50 ஏக்கர் பரப்பில் மீன்கள் கிடந்தது.
அதனை விவசாயிகள் போட்டி போட்டு அள்ளினர். உயிருடன் நீந்திய மீன்களை கட்டையால் அடித்து கொன்று பிடித்தனர். மாலை வரை இந்த மீன் வேட்டை நடந்தது. ஒவ்வொரு மீனும் அரைக்கிலோ எடையுடன் காணப்பட்டது.

இரவு பெய்த மழையில் வானத்தில் இருந்து மீன்கள் கொட்டியதாக கிராம மக்கள் கூறினார்கள். ஜராவதம் கிராமத்தில் மழை பெய்தபோது சாலையில் மீன்கள் கொட்டியதாக நேரில் பார்த்த நரசிம்மராவ் தெரிவித்தார்.மீன் மழை பெய்த தகவல் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான மக்கள் கொள்ளமுடி கிராமத்துக்கு வந்து வானத்தில் இருந்து கொட்டிய மீன்களை பார்த்து அதிசயித்தனர்.

மீன் மழை பெய்வது அதிசய மான ஒன்றுதான் என்று விசா கப்பட்டினத்தைச் சேர்ந்த சுற்றுசூழல் நிபுணர் முரளி கிருஷ்ணா தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

ஆகாயத்தில் அடர்த்தியான மேகங்கள் ஏற்பட்டு நகரும் போது சுழல் காற்று ஏற்படும். அந்த சூழல் காற்று யானையின் தும்பிக்கை போல கீழே இறங்கும்.
கடல் மற்றும் நீர் நிலை மேல் அந்த சுழல் காற்று ஏற்படும் போது நீரில் உள்ள மீன்கள், தவளைகள் போன்றவைகள் இழுக்கப்பட்டு  மேலே அடித்துச் செல்லும். சுழல் காற்றின் சீற்றம் குறையும் போது அதனால் ஈர்க்கப்பட்ட மீன்கள் தரையில் விழுந்து சிதறுகிறது.

அமெரிக்கா, தாய்லாந்து போன்ற நாடுகளீல் இது போன்ற மீன் மழை அடிக் கடி நிகழ்வது உண்டு. வட மாநிலத்தில் கூட மீன் மழை பெய்து உள்ளது. ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதியில் மேக சுழல் காற்று ஏற்பட்டு மீன்கள் மேலே அடித்துச் செல்லப்பட்டு மழையாக கொட்டி இருக்கலாம் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறி னார்.


நீங்கள் அசைவப் பிரியரா?
அதுலையும் நண்டுப் பிரியரா?
சற்றுப் படியுங்கள் இதை..!!
நீங்கள் நண்டு வாங்தும் போது (படத்தில் நண்டின் மேல் உள்ள சிறு ஓட்டையை கவனிக்கவும்..!)இப்படி சிறு துவாரம் கண்ணில் பட்டால் வாங்காதீர்கள். இப்படிப் பட்ட நண்டுகள் சைனாவில் இருந்து இறக்குமதியாகின்றன.
இந்த நண்டுகள் பார்க்கும் போது, புதியதாய் இருக்க வேண்டுமென்ற நோக்குடன்.. இஞ்ஜக்ஷன் போட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். !!

ஓட்டுநர் உரிமம் பெற இனி தமிழிலும் தேர்வு எழுதலாம் துபாயில்.




துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற நடத்தப்படும் தேர்வில் இனி தமிழ் உள்ளிட்ட நான்கு இந்திய மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற கணினி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே உரிமம் பெற முடியும்.

இந்த தேர்வு ஆங்கிலம், உருது, அரபிக் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது.

வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து, தமிழ், இந்தி, பெங்காலி, மலையாளம், ஆகிய இந்திய மொழிகள் உட்பட 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என  சாலை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

மேலும், பயிற்சி வகுப்புகளும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக
தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)
தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in

உலகிலே மிக நீளமான train 3km நீளம் கொண்டது.....!

'தண்ணிகாட்டிய' டி.எஸ்.பி. தங்கவேல் கைது!! செம்மரக் கடத்தல் வழக்கில் திருப்பம்.

 செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. தங்கவேலை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள பாலூரைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் சின்னபையன் கடந்த மாதம் 26-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. தங்கவேல், கடந்த 25-ந் தேதி சின்னபையனை மிரட்டி 7 டன் செம்மரக் கட்டைகளை அள்ளிச் சென்றது தெரியவந்தது.

dspமேலும் செம்மரக் கடத்தல் கும்பலுக்கும், டி.எஸ்.பி. தங்கவேலுக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கவேலுவை தேடி வந்தனர். ஆனால் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தங்கவேல் தலைமறைவாகி விட்டார்.அத்துடன் முன் ஜாமீன் பெறவும் முயன்றுவந்தார். அம்முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி. தங்கவேல் நேற்று நீதிமன்றத்தில் சரணடைய முயற்சித்திருந்தார். இதை அறிந்த காவல்துறையினர் டி.எஸ்.பி. தங்கவேலுவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் செம்மரக் கடத்தல் கும்பலுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணைநடத்தப்பட்டு வருகிறது.

இன்று இறுதி முடிவு.நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டம்




நிலம் கையகப்படுத்துதல்  அவசரச் சட்டம்  கடந்த டிசம்பர் மாதத்தில் முதல் முறையாக பிறப்பிக்கப்பட்டது. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் 6 வாரங்களுக்குள் அதற்கு மாற்றான மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றம் கூட்டப்படாத நிலையில், 6 மாதங்களுக்குள் அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்நிலையில் டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட முதல் அவசரச் சட்டம் காலாவதியாவதற்கு ஒரு நாள் முன்பாக,  கடந்த மார்ச் மாதத்தில் இரண்டாவது முறையாக அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இரண்டாவது முறையாகப் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் அடுத்த மாதம் 4-ஆம் தேதியுடன் காலாவதியாக உள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தைப் பிறப்பிப்பது குறித்து மத்திய அரசு இன்று முடிவெடுக்கலாம் எனத் தெரிகிறது.

Dina Udhayam: தயாநிதி மாறன் மிரட்டியதாக பிரதீப் பைஜால் குற்றச்சா...

Dina Udhayam: தயாநிதி மாறன் மிரட்டியதாக பிரதீப் பைஜால் குற்றச்சா...: தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர்  பிரதிப் பைஜால் "இந்திய மறு சீரமைப்பின் முழு கதை"  என்ற பெயரில் புத்தகம் ஒன்றை ...

Dina Udhayam: தென்னாப்ரிக்காவின் இந்திய மைதானங்கள் அறிவிப்பு .

Dina Udhayam: தென்னாப்ரிக்காவின் இந்திய மைதானங்கள் அறிவிப்பு .: தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்...

Dina Udhayam: ட்ராய் முன்னாள் தலைவர்.2ஜி ஒதுக்கீட்டில் மன்மோகன் ...

Dina Udhayam: ட்ராய் முன்னாள் தலைவர்.2ஜி ஒதுக்கீட்டில் மன்மோகன் ...: 2ஜி விவகாரத்தில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை, The Complete Story of Indian Reforms: 2G, Power and Private Enterprise என்ற பெயரில...

Dina Udhayam: சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ள 5 இந்தியர்களி...

Dina Udhayam: சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ள 5 இந்தியர்களி...: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று 5 பேரின் பெயர்களும் சுவிச்சர்லாந்து அரசின் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. தொழிலதிபர் யாஸ் பிர்லா, குர...

தயாநிதி மாறன் மிரட்டியதாக பிரதீப் பைஜால் குற்றச்சாட்டு.



தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர்  பிரதிப் பைஜால் "இந்திய மறு சீரமைப்பின் முழு கதை"  என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  2 ஜி வழக்கில் இணைந்து போகுமாறு கூறியதுடன், வழக்கில் ஒத்துழைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தன்னை மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

தயாநிதி மாறன், ஒளிபரப்பு நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்பதால் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக அவரை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்திருத்ததையும், அதனை மன்மோகன் சிங் நிராகரித்துவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தொலைத் தொடர்புத் துறையின் அனைத்து முடிவுகளையும் தாமே எடுப்பேன் என்று கூறிய தயாநிதி மாறன்,  உத்தரவுகளுக்கு கட்டுப்படாவிட்டால் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தம்மை எச்சரித்தாக பிரதீப் பைஜால் கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் உட்பட ஒவ்வொரு வழக்கிலும், சி.பி.ஐ தரப்பால் தாம் எச்சரிக்கப்பட்டதாக கூறியுள்ள அவர், பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ஒப்புதலுடனேயே ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் தொலைத் தொடர்புத் துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அந்த புத்தகத்தில், பிரதீப் பைஜால் கூறியுள்ளார்.

தென்னாப்ரிக்காவின் இந்திய மைதானங்கள் அறிவிப்பு .




தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகள் நடைபெறும் மைதானங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதன்படி  டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், நாக்பூர் ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

ஒரு நாள் போட்டிக்கு சென்னை, கான்பூர், ராஜ்கோட், மும்பை மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2012-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது. 

20 ஓவர் தொடர் கொல்கத்தா, மொகாலி, தர்மசாலாவில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ராய் முன்னாள் தலைவர்.2ஜி ஒதுக்கீட்டில் மன்மோகன் சிங் மிரட்டினார்.






2ஜி விவகாரத்தில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை, The Complete Story of Indian Reforms: 2G, Power and Private Enterprise என்ற பெயரில் பிரதீப் பைஜால் புத்தமாக எழுதியுள்ளார். அதில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில், மத்திய அரசுடன் உரிய ஒத்துழைப்பு வழங்கத் தவறினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மன்மோகன் சிங் தம்மை மிரட்டியதாக பைஜால் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை திசை திருப்ப, தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பைஜால் குற்றம்சாட்டியுள்ளார். 

2ஜி விவகாரத்தில், பிரச்னைகள் எப்படி தலைதூக்கின என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள அத்தியாயத்தில், 2004ம் ஆண்டு, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் நியமிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் பல்வேறு மட்டங்களிலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதாக பைஜால் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

2ஜி விவகாரத்தில், தனது உத்தரவுகளை செயல்படுத்தத் தவறினால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தயாநிதி மாறனும், தனக்கு நேரடியாக மிரட்டல் விடுத்ததாக பைஜால் குற்றம்சாட்டியுள்ளார். டாடா ஸ்கை Tata Sky நிறுவனத்தை சன் டிவியுடன் இணைக்க வேண்டும் என டாடா நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ரத்தன் டாடாவை 2004ம் ஆண்டு தயாநிதி மாறன் மிரட்டியதாகவும் பைஜால் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ள 5 இந்தியர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.







மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று 5 பேரின் பெயர்களும் சுவிச்சர்லாந்து அரசின் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. தொழிலதிபர் யாஸ் பிர்லா, குர்ஜிங்சிங் கோசர், ரிதிகா சர்மா ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதே போன்று லதா சாவ்னி சங்கீதா சாவ்னி ஆகிய இரு பெண்களின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் வரும் காலங்களில் இன்னும் பலரது பெயர்கள் வெளி வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அழித்த தகவல்களை திரும்ப பெற முடியும்.அண்டுராய்ட் போனில்.


Image result for அண்டுராய்ட்

இப்போது பலரும் தனது பழைய போனை விற்பனை செய்து புதிய பதிவு கொண்ட போன்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் . பழைய போனை விற்பனை செய்யும் முன் அதில் உள்ள அனைத்து தகவல்களை அழித்து விட்டு விற்பனை செய்கின்றனர் பயனாளர்கள் .

அண்டுராய்ட் போனில் இவ்வாறு அழித்த தகவல்களை திரும்ப பெற முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் . இதனால் விற்பனை செய்யப்பபட்ட பழைய போனில் இருந்து தகவல்கள் திருட முடியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

அழிக்கப்பட்ட பாதுகாப்பு தகவல்களை திரும்ப பெற முடியும் என்று  ஆய்வாளர்கள் ஆதாரத்துடன்  நிருபித்துகாட்டியுள்ளனர்.

கிசான் தொலைக்காட்சி: இன்று தொடங்கி வைக்கிறார் மோடி.





வேளாண் தொழில் நலிவடைந்து வருவதோடு, விளைநிலங்கள் கான்கிரீட் காடுகளாக மாறிவருகின்றன. இந்த நிலையில் பிரதமர் இன்று தொடங்கி வைக்கும் வேளாண் தொலைக்காட்சியில் வேளாண் மற்றும் வேளாண்சார் துறைகள் பற்றிய நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.  தொலைக்காட்சியின் வடிவமைப்பிற்காக 50க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்சி பெற்ற விவசாய வல்லுநர்களும், தொழில்நுட்ப ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த தொலைக்காட்சி விவசாயத்துறையை மேலும் வலுப்படுத்தவும், விவசாயத்தின் மீதான ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தவும் உதவும் என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அனில் பலூனி.

கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாட்டின் விவசாய சூழலை தெரிந்து கொள்ளும் வகையில் விவசாயத்திற்கான பிரத்யேக தொலைக்காட்சி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவு செய்த பின்னர் இதுபோன்ற தொலைக்காட்சியை தொடங்குவது அரசியல் நோக்கம் கொண்டது என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து பிரதமர் மோடி விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில்  ”மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இருப்பதை வெளிப்படுத்தியதோடு,  பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீட்டு நிதி வழங்கியும் தனது ஆதரவை தெரிவித்துவருகிறார்.  டெல்லி மதுராவில் நேற்று நடைபெற்ற விவசாயிகளின் பேரணியிலும், விவசாயிகளின் நண்பனாக பாஜக அரசு உள்ளது என்பதை பிரதமர் மோடி கூறினார்.

விவசாயிகளுக்கான இந்த 24 மணி நேர தொலைக்காட்சியில் விவசாயம் சார்ந்த சிறப்பு செய்தி தொகுப்புகள், விவாதங்கள் மற்றும் உலக நாடுகளின் விவசாயத்துறை குறித்த சிறப்பு தகவல்கள் இடம் பெறும். 30 நிமிட சிறப்பு வேளாண் செய்திகள், விவாத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.  கிராமப்புற மக்கள் இந்த தொலைக்காட்சியை எளிதாக பார்க்கும் வகையில் அனைத்து கேபிள் மற்றும் டிடிஎச் சேவைகளில் கட்டாயமாக இந்த தொலைக்காட்சியை ஒளிபரப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  பிரதமர் மோடியினால் தொடங்கப்படும் கிசான் தொலைக்காட்சி, அரசியல் தலையீடுகளையும் மீறி விவசாயத்துறையை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இன்று முதல் இறுதி வாதம் தொடக்கம்.2ஜி வழக்கு




இன்று நடைபெறும் வாதங்களின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வாதங்களை முன்வைக்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இன்று தேர்வு ஷேவாக், ஹர்பஜனுக்கு வாய்ப்பா? வங்காளதேச தொடர்.

வங்காளதேச தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று தேர்வு செய்து அறிவிக்கப்படுகிறது. ஷேவாக், ஹர்பஜன்சிங், யுவராஜ்சிங், ஜாகீர்கான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி இன்று தேர்வு
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) 7–ந் தேதி முதல் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் ஒரு டெஸ்ட் 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டி பாதுல்லாவில் ஜூன் 10–ந் தேதி முதல் 14–ந் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் மிர்புரில் ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
வங்காளதேச தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு மும்பையில் இன்று (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு நடக்கிறது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்கிறார்கள்.
விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா
கடந்த டிசம்பரில் நடந்த ஆஸ்திரேலிய பயணத்தின் போது கேப்டன் டோனி திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட்கோலி நியமிக்கப்பட்டார். உலக கோப்பை மற்றும் ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து விளையாடியதால் டோனி, விராட்கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வு கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்படமாட்டாது என்றும் ஒருநாள் போட்டி தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. டோனிக்கு ஓய்வு அளிக்கப்படாவிட்டால் அவர் ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக இருப்பார். ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள் லோகேஷ் ராகுல், ரஹானே, தவால் குல்கர்னி ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு?
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான ஷேவாக், யுவராஜ்சிங், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் ஆகியோர் வங்காளதேச தொடருக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பிரிவு உபசார போட்டியாக இந்த தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 2011–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஜொலித்த இவர்கள் அதன் பிறகு அணியில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார்கள். 4 பேரும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார்கள். ஷேவாக், யுவராஜ்சிங் சொதப்பினாலும், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் சிறப்பாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணாடியில் விரிசல் டெல்லி விமானம் அவசரமாக தரை இறங்கியது 169 பயணிகள் உயிர் தப்பினர்.



            ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏ.ஐ–873 என்ற விமானம் டெல்லியில் இருந்து புவனேஸ்வரத்துக்கு நேற்று காலை புறப்பட்டது. இதில் 169 பயணிகள் பயணம் செய்தனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராகோ பகுதி அருகே விமானம் பறந்து கொண்டிந்த போது விமானத்தின் முன்பகுதியில் உள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை விமானி உணர்ந்தார். உடனடியாக அவர் லக்னோ விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு லக்னோ விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார்.
இதையடுத்து விமானம் அவசரமாக லக்னோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் 169 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தேர்வில் அதிகம் மார்க் போடுவதாக கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்.



சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகான் என்ற பகுதியில் மாதவ் நாக் (வயது 52)அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த பள்ளி மாணவியை தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாக கூறி கடந்த மூன்று வருடங்களாக பாலியல் பலத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பம் அடைந்த பள்ளி மாணவி பள்ளிக்கு செல்வதை நிறுத்து விட்டார். மகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை கண்ட மாணவியின் பெற்றோர் இது குறித்து
மாணவியிடம் விசாரித்தனர். அதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாதவ் நாக் கடந்த 3 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாக்டி போலீசில்புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுகொண்ட போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்வதற்காக தமட்ரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சிஹாவாவுக்கு சென்றுள்ளனர்.

நயன்தாராவுக்கு திடீர் திருமணம். கிறிஸ்தவ கோவிலில்.

நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதலில் தோல்வி அடைந்தவர் முதலாவதாக சிம்புவுடன் காதல் வயப்பட்டார். இருவரும் நெருங்கி பழகினார்கள். காதலை வெளிப்படையாகவும் அறிவித்தனர். கிறிஸ்தவ கோவிலில் நயன்தாராவுக்கு திடீர் திருமணம்?

ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு பிரபுதேவாவுக்கும் நயன்தராவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். இதற்காக பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார். 

பிரபுதேவா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் தானும் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். கோவிலில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த காதலும் முறிந்தது. இருவரும் பிரிந்தனர். 

காதல் தோல்விகளால் விரக்தியில் இருந்த நயன்தாரா மீண்டும் சினிமாவில் பிசியாக நடிக்க துவங்கினார். தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வந்தார்.

விக்னேஷ் சிவன் ஏற்கனவே சிம்புவை வைத்து ‘போடா போடி’ படத்தை இயக்கியவர். ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் இருவரும் திடீரென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

கொச்சியில் உள்ள கிறிஸ்தவ கோவிலில் இந்த திருமணம் நடந்துள்ளது. இருவர் தரப்பில் இருந்தும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டதாகவும் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும். திருமண பரிசாக விக்னேஷ் சிவனுக்கு ஆடம்பர சொகுசு கார் ஒன்றை நயன்தாரா பரிசாக வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் நயன்தாராவைவிட ஒரு வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.